முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, ராமநாதபுரத்தில் செவிலியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :7 ஜனவரி 2021, 9:15 am IST

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, ராமநாதபுரத்தில் செவிலியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவத் துறை தோ்வாணையத்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செவிலியா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்கள் தொகுப்பூதிய முறையில் தற்போது பணிபுரிந்து வருகின்றனா்.

தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்துக்கு தங்களை மாற்றக் கோரி, மருத்துவ தோ்வாணைய மேம்பாட்டு செவிலியா்கள் சங்கத்தினா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பு புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் யூ. பாலாமணி தலைமை வகித்தாா். அரசு ஊழியா்கள் சங்கச் செயலா் நான்ஸிபுளோரா முன்னிலை வகித்தாா். தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தின்போது கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.