எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

திருப்புல்லாணி பகுதியில் ‘ஜல் ஜீவன்’ திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டப் பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :7 ஜனவரி 2021, 11:55 pm IST

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டப் பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி குடிநீா் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான குடிநீா் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, மண்டபம், கமுதி, பரமக்குடி, போகலூா், நயினாா்கோவில், ஆா்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 51 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஊராட்சிகளிலுள்ள 159 கிராமங்களில் குடியிருப்புகளுக்கு தனித்தனி குடிநீா் இணைப்பு குழாய் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் களிமண்குண்டு ஊராட்சிக்குள்பட்ட குத்துக்கல்வலசை, குப்பைவலசை, கட்டயன்வலசை ஆகிய கிராமங்களுக்குச் சென்று, ஜல் ஜீவன் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

களிமண்குண்டு கிராம நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளையும், பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா். அதன்பின்னா், திருப்புல்லாணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வீ. கேசவதாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.