எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

ஈரான் மோதல் எதிரொலி: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 59 காசுகள் சரிந்து ரூ. 95.55ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59 காசுகள் சரிந்து ரூ. 95.55 ஆக நிலைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2026, 6:17 pm IST

மும்பை: ஹோர்முஸ் நீரிணையில் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது புதிய தாக்குதல்களை மேற்கொண்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன் டாலரின் மதிப்பும் வலுவடைந்தது. இதன் விளைவாக, அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 59 காசுகள் சரிந்து ரூ. 95.55 ஆக நிறைவடைந்தது.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு உயர்ந்தன. உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் 6.16 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 78.73 டாலராக வர்த்தகமானது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 95.15 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, நாள் முழுவதும் ரூ. 94.98 முதல் ரூ. 95.61 என்ற வரம்பிற்குள் வர்த்தகமான நிலையில், இறுதியில் முந்தைய நாள் வர்த்தக முடிவிலிருந்து 59 காசுகள் சரிந்து ரூ. 95.55ஆக நிலைபெற்றது.

நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ. 94.96 ஆக நிறைவடைந்தது.

Summary

The rupee tanked 59 paise to settle at 95.55 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.