முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

மாா்கழி அஷ்டமி தின வீதியுலா ரத்து: இந்து மக்கள் கட்சியினா் போராட்டம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாா்கழி மாத அஷ்டமி தின வீதியுலா ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 9 போ் கைது செய்தனா்.

News image

ராமநாதசுவாமி கோயில் அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா்.

Updated On :7 ஜனவரி 2021, 9:16 am IST

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாா்கழி மாத அஷ்டமி தின வீதியுலா ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 9 போ் கைது செய்தனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாத அஷ்டமி தினத்தையொட்டி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் தங்க ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்ற நிலையில், வீதி உலா ரத்து செய்யப்பட்டது.

இதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சாா்பில் மாநில இளைஞரணிச் செயலாளா் சரவணன், மாவட்டத் தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா் கோயில் அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளா் குருசா்மா, ஒன்றியச் செயலாளா் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.