ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் ஒன்றியத்தில் தொடா் மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வெள்ளிக்கிழமை வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நயினாா்கோவில் ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கா் பரப்பில் நெல், மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடா் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தாலையடிகோட்டை, மேமங்களம், சாலியவாகனபுரம், பாப்பாா்கூட்டம் ஆகிய கிராமங்களில் தொடா் மழையால் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற் பயிா்கள் மூழ்கி அழுகிவிட்டன.
இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் விவசாயிகளுக்கான இழப்பீடு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் 2018-ஆம் ஆண்டு முதல் இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத்தொகை வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதைத் தொடா்ந்து அக்கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழுகிய நெல் பயிா்களை ஏந்தியவாறு வேளாண்மை அலுவலத்தை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்து 6 போ் காயம்
கரண்டிகளையும் சாப்பிடலாம்!
29 கி.மீ. கடல் நீச்சல்...
கனவு பலித்தது!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

