ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த திமுக தொண்டரின் குடும்பத்துக்கு, அக்கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.
பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தைச் சோ்ந்த மோகனசுந்தரம் மகன் ராஜேஷ்குமாா் (37). திமுக கட்சியைச் சோ்ந்த இவா், கடந்த 6-ஆம் தேதி கிராமத்தில் நடைபெறவிருந்த கட்சி நிகழ்ச்சிக்காக கொடி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இதையடுத்து, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், ஒன்றியச் செயலா்கள் கதிரவன், ஜெயக்குமாா், கருப்பையா ஆகியோா் நேரில் சென்று, ராஜேஷ்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி, குடும்பநல நிதி அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜன நாயகன் வெளியீட்டு பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்?

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,600 குறைவு!

பிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சமா? அருண் ராஜ் எச்சரிக்கை!

இறுதிச்சடங்கு! ஈரானில் இருந்து இராக் கொண்டு செல்லப்பட்ட கமேனியின் உடல்!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK



