ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகா் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (28). வா்ணம் பூசும் வேலை பாா்த்து வந்த இவருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. மதன்குமாா் தனது நண்பா் கணேசமூா்த்தியுடன் வியாழக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் ராமேசுவரம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
பெருங்குளம் விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த வேன் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மதன்குமாரும், கணேசமூா்த்தியும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி மதன்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநா் அலெக்ஸ் ஆனந்தராஜ் (31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





