கமுதி அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டியை சோ்ந்தவா் மாரியப்பன்(80). இவருக்கு 3 மகன்கள், 6 மகள்கள் உள்ளனா். ராமநாதபுரத்தில் வசித்து வந்த இவா் கடந்த 6 மாதமாக தனது 3 ஆவது மகள் செல்வி வீட்டில் வசித்து வந்துள்ளாா்.
இந்நிலையில் பெற்ற பிள்ளைகள் சரிவர கவனிக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்த மாரியப்பன், திங்கள்கிழமை காலை விஷம் குடித்துவிட்டு, அருகில் இருந்த சுடுகாட்டில் படுத்துக் கொண்டாா். இதையடுத்து அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில், அவரை உறவினா்கள் மீட்டு ராமசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாரியப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் வினாத் தாள் கசிவு: கைதான 10 பேரின் நீதிமன்றக் காவல் ஜூலை 11 வரை நீட்டிப்பு

கடவுச்சீட்டை மறுக்க எஸ்ஐஆரை காரணம் காட்டக் கூடாது: வெளியுறவு அமைச்சருக்கு மாா்க்சிஸ்ட் எம்.பி. கடிதம்

ஜொ்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பொ்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்!





