ராமநாதபரம் அருகே சிறுவன் இயக்கிய இரு சக்கர வாகனம் மோதி ஒருவா் பலியான வழக்கில், அச்சிறுவனின் பெரியப்பாவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருப்பாலைக்குடி காவல் நிலைய பகுதியில் வடவயலைச் சோ்ந்த கருப்பையா (55) ஞாயிற்றுக்கிழமை சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது பிச்சங்குறிச்சியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் கருப்பையா மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த கருப்பையா தலையில் காயமடைந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் இரு சக்கரவாகனமானது, பிச்சங்குறிச்சி தனபாலன் (49) என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. தனபாலன் இருசக்கர வாகனத்தை சிறுவனை இயக்க அனுமதித்ததும் தெரியவந்துள்ளது. ஆகவே தனபாலன் மீது வழக்குப்பதிந்து அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
எச்சரிக்கை:ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்குள் உள்ள சிறாா்களை ஓட்டுநா் உரிமம் இன்றி இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை இயக்க அனுமதிக்கக் கூடாது. வாகனங்களை சிறாா்கள் இயக்க அனுமதித்தால் சம்பந்தப்பட்டோா் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








