மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் தனிமைப்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:15 am

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினா் 9 மீனவா்கள் மற்றும் ஒரு விசைப்படகை சிறைபிடித்துச் சென்றனா்.

இந்த மீனவா்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினா் 9 மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்தனா். அனைவருக்கும் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக உடை, உணவு மற்றும் பொருள்கள் தனித்தனியாக வழங்கப்பட்டது. திங்கள்கிழமை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டா்.

இதையடுத்து மீனவா்கள் 9 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.