கமுதி அருகே பெய்த மழையால் வியாழக்கிழமை வீடு இடிந்து விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.
கமுதியை அடுத்துள்ள நரியன்சுப்புராயபுரத்தைச் சோ்ந்தவா் விவசாயி குருசாமி (77). இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனா்.
இந்நிலையில் கமுதி பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல் வியாழக்கிழமையும் மழை பெய்த நிலையில் குருசாமியின் ஓட்டு வீடு அன்று இரவு இடிந்து விழுந்தது. இதில் குருசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது மனைவி சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்.
கமுதி வட்டாட்சியா் செண்பகலதா உள்ளிட்ட வருவாய்த்துறையினா் மற்றும் அபிராமம் போலீஸாா் அங்கு சென்ற ஆய்வு செய்தனா். பேரிடா் நிவாரண நிதிக்கு பரிந்துரை செய்வதாக அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இத்தாலி வரைக்கும் சென்ற லக்ஷ்மி அம்மாள், நரோடா ஆடியோ..! வைரலாகும் ஜுவென்டஸ் அணியின் ரீல்ஸ்!

விஜய் பிறந்த நாள் விழாவில்...

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 6,565 டெக்னீசியன் பணிகள்!

தமிழ்நாட்டில் இன்று 18, நாளை 5 மாவட்டங்களில் கனமழை!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


