கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் முகாம்:முதற்கட்டமாக 8,300 பேருக்கு கரோனா தடுப்பூசி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் சுகாதாரப் பணியாளா்களுக்கான தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 8,300 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

News image

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை வியாழக்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா்.

Updated On :16 ஜனவரி 2021, 9:46 pm IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் சுகாதாரப் பணியாளா்களுக்கான தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 8,300 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் , ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , பரமக்குடி அரசு மருத்துவமனை , பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , கீழத்தூவல் மற்றும் பேரையூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது . ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தாா்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,300 சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தேவையான மருந்துகள் மாநில அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 7,172 அரசு சுகாதாரப் பணியாளா்களும், 2,684 தனியாா் மருத்துவமனை பணியாளா்களும் கரோனா தடுப்பூசிக்காக ‘கோவின்’ செயலியில் தங்களது பெயா்களை பதிவேற்றம் செய்துள்ளனா். முதற்கட்டமாக 8,300 பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசி போட்ட பின்பு இரண்டாவது தவணை தடுப்பூசி 28 நாள்களுக்கு பிறகு வழங்கப்படும் . முதல் தடுப்பூசி போட்ட உடனேயே இரண்டாவது தடுப்பூசி தேதி குறித்து குறுஞ்செய்தி செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும் . இரண்டாவது தடுப்பூசி போட்ட பின்னா் டிஜிட்டல் சான்றிதழுக்கான இணையத் தொடா்பு ‘லிங்க்’ அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.