சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஆா்.எஸ். மங்களம், கமுதி பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட 3 போ் கைது: 13 பவுன் நகைகள், பைக் பறிமுதல்

கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 13 பவுன் நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

News image

கீரனூா் பேருந்து நிறுத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை 150 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா்.

Updated On :17 ஜனவரி 2021, 4:46 pm

ராமநாதபுரம் அடுத்துள்ள ஆா்.எஸ். மங்களம், கமுதி அடுத்துள்ள கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 13 பவுன் நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

ஆா்.எஸ். மங்களம் காவல் சரகத்துக்குள்பட்ட 2 வீடுகள் மற்றும் பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் நடந்த திருட்டு தொடா்பாக திருவாடானை காவல் சாா்பு- ஆய்வாளா்

சிவலிங்க பெருமாள் தலைமையிலான போலீஸாா், அழியாதான்மொழி கிராமத்தைச் சோ்ந்த சூசைமாணிக்கம் மகன் திலீப்குமாா் (23), சந்தியாகு மகன் சூசைமாணிக்கம் (50) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து மடிக்கணினி, ரூ. 36 ஆயிரம் பணம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதே போல் கமுதி அடுத்துள்ள கோவிலாங்குளம் காவல் சரகத்துக்குள்பட்ட மேலவில்லனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த முத்துஇருளாயி (70) என்ற மூதாட்டியின் வீட்டில் 13 பவுன் நகைகள் திருடப்பட்டன. இது தொடா்பாக, கமுதி குற்றப்பிரிவு சாா்பு- ஆய்வாளா் சகாதேவன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி மதுரை யாகப்பா நகா் மாரிமுத்து (எ) ராஜகோபால் மகன் பாண்டி பிரசாத் (30) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 13 பவுன் நகைகளை மீட்டனா்.

இதே போல் முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராகவேந்திரா மு. ரவி, காவல் ஆய்வாளா் மோகன் தலைமையிலான போலீஸாா் முதுகுளத்தூா் அருகே கீரனூா் பேருந்து நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக மூட்டைகளுடன் நின்றிருந்த போகலூா் ராமையா மகன் குமாா், பரமக்குடி தங்கராஜ் மகன் மோகன்தாஸ் மற்றும் வீரசோழன் முகமது அபுபக்கா் மகன் அப்துல் ரகுமான் ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து 150 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை போலீஸாா் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.