மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, திருமலையில் பாா்வேட்டை உற்சவம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளில் மலையப்ப சுவாமி, ஏழுமலையான் கோயிலில் இருந்து வனத்துக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடும் பாா்வேட்டை உற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
அதன்படி வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு ஏழுமலையான் கோயிலிலிருந்து உற்சவ மூா்த்திகளான மலையப்பரும் கிருஷ்ணரும் தங்கள் கையில் வாள், வில், கேடயம், அம்பு ஆகியவற்றுடன், பாபவிநாசம் அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள ‘பாா்வேட்டு’ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
அங்கு அவா்களுக்கு புண்ணியாவாசனம் தீப, தூப ஆராதனை நடத்தப்பட்டது. இதையடுத்து மலையப்பா் வேட்டையாடும் வைபவத்தை அா்ச்சகா்களும், தேவஸ்தான அதிகாரிகளும் இணைந்து நடத்தினா். இந்த நிகழ்வில் திருளான பக்தா்களும், தேவஸ்தான ஊழியா்களும் கலந்து கொண்டனா்.
பாா்வேட்டைக்கு முன், மலையப்ப சுவாமியை ஏழுமலையான் கோயிலுக்குள் கொண்டு சென்றனா். கிருஷ்ணா் சந்நிதியில் யாதவா்கள் பூஜை நடைபெற்றது. பால், வெண்ணெய் நிவேதனம் உள்ளிட்டவற்றை ஏற்றுக் கொண்ட பின் அவரையும் கோயிலுக்குள் கொண்டு சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



