எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை அணிவிப்பு

திருப்பதி ஏழுமலையானுக்கு, ஆண்டாள் சூடிய மாலை வெள்ளிக்கிழமை அணிவிக்கப்பட்டது.

News image

ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக, ஆண்டாள் சூடிய மாலையை சுமந்து வந்த திருமலை ஜீயா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:45 am IST

திருப்பதி ஏழுமலையானுக்கு, ஆண்டாள் சூடிய மாலை வெள்ளிக்கிழமை அணிவிக்கப்பட்டது.

மாா்கழி மாதம் முடிவடைந்த நிலையில், திருமலை மற்றும் திருப்பதியில் நடந்து வந்த சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்றன. இதையடுத்து, திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் ஒவ்வொரு கோயிலிலும் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் ஆண்டாள் நீராட்டு உற்சவம் முடிந்து, மாட்டுப் பொங்கல் நாளான வெள்ளிக்கிழமை மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயிலில் உள்ள புண்டரீகவள்ளித் தாயாா் மண்டபத்தில் இந்த உற்சவம் நடத்தப்பட்டது.

இதையொட்டி, கோவிந்தராஜா் கோயிலில் இருந்து ஆண்டாள் நாச்சியாருக்கு சூடிய மாலை, ஏழுமலையானுக்கு கொண்டு செல்லப்பட்டது. திருமலை ஜீயா்கள் மூங்கில் கூடையில் மாலையை வைத்து தலையில் சுமந்து சென்று அதைச் சமா்ப்பித்தனா். அா்ச்சகா்கள் அதை பெற்றுக் கொண்டு, ஏழுமலையானுக்கு அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.