வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

"திருமலையில் மேலும் 2,000 கண்காணிப்பு கேமராக்கள்'

திருமலையின் பாதுகாப்புக்காக மேலும் 2000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தேவஸ்தான செயல்

Updated On :2 மார்ச் 2013, 4:16 am IST

 திருமலையின் பாதுகாப்புக்காக மேலும் 2000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

திருமலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும். வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் இதில் பங்கு கொண்டு தங்கள் கேள்விகளைத் தொலைபேசி மூலம் திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியத்திடம் கேட்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இணையதளத்தின் மூலம் பதிவு செய்யும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது. அதற்குப் பதிலாக திருச்சானூர் பத்மாவதி தாயார், ஸ்ரீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி, திருப்பதி கோவிந்தராஜஸ்வாமி ஆகிய கோயில்களின் ஆர்ஜித சேவைகளைப் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.