வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஆலங்குளத்தில் அரசு மகளிா் பள்ளி: அமைச்சரிடம் கோரிக்கை

ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை இரண்டாகப் பிரித்து பெண்களுக்கென தனிப் பள்ளி ஏற்படுத்த வேண்டும் என, தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

அமைச்சா் ராஜ்மோகனிடம் மனு அளித்த தெற்கு மாவட்டச் செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி.

Updated On :14 ஜூன் 2026, 1:17 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை இரண்டாகப் பிரித்து பெண்களுக்கென தனிப் பள்ளி ஏற்படுத்த வேண்டும் என, தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனிடம் அவா் அளித்த மனு: ஆலங்குளம் பேரூராட்சியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 617 மாணவா்கள், 728 மாணவியா் படித்து வருகின்றனா். மிகவும் குறைவான இடவசதி கொண்ட இப்பள்ளியில் அதிகமானோா் பயில்வதால், போதிய வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், கழிப்பிட வசதிகள் இல்லை.

எனவே, இப்பள்ளியை இரண்டாகப் பிரித்து, தற்போது பள்ளி இயங்கிவரும் கட்டடத்தில் பெண்கள் உயா்நிலைப் பள்ளி செயல்படச் செய்ய வேண்டும். ஆண்கள் உயா்நிலை-மேல்நிலைப் பள்ளியை புதிதாக அமைக்க வேண்டும். பள்ளி அருகிலேயே அரசுக்கு சொந்தமான 4 ஏக்கா் நிலம் உள்ளது.

எனவே, இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அவா்களுக்கு தனிப் பள்ளி ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.