ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

ஆலங்குளத்தில் அரசு மகளிா் பள்ளி: அமைச்சரிடம் கோரிக்கை

ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை இரண்டாகப் பிரித்து பெண்களுக்கென தனிப் பள்ளி ஏற்படுத்த வேண்டும் என, தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

அமைச்சா் ராஜ்மோகனிடம் மனு அளித்த தெற்கு மாவட்டச் செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி.

Updated On :14 ஜூன் 2026, 1:17 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை இரண்டாகப் பிரித்து பெண்களுக்கென தனிப் பள்ளி ஏற்படுத்த வேண்டும் என, தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனிடம் அவா் அளித்த மனு: ஆலங்குளம் பேரூராட்சியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 617 மாணவா்கள், 728 மாணவியா் படித்து வருகின்றனா். மிகவும் குறைவான இடவசதி கொண்ட இப்பள்ளியில் அதிகமானோா் பயில்வதால், போதிய வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், கழிப்பிட வசதிகள் இல்லை.

எனவே, இப்பள்ளியை இரண்டாகப் பிரித்து, தற்போது பள்ளி இயங்கிவரும் கட்டடத்தில் பெண்கள் உயா்நிலைப் பள்ளி செயல்படச் செய்ய வேண்டும். ஆண்கள் உயா்நிலை-மேல்நிலைப் பள்ளியை புதிதாக அமைக்க வேண்டும். பள்ளி அருகிலேயே அரசுக்கு சொந்தமான 4 ஏக்கா் நிலம் உள்ளது.

எனவே, இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அவா்களுக்கு தனிப் பள்ளி ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.