தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் திருக்கோயிலில் வைகாசி அவதாரத் திருவிழா திங்கள்கிழமை (மே 13) தொடங்குகிறது. இந்த மாதம் 15-ஆம் தேதி கொடியேற்றமும், 23-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகின்றன.
நவத்திருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி அவதாரத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது.
மே 15-ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றமும், இரவில் இந்திர விமான வாகனத்தில் நம்மாழ்வார் வீதி உலாவும் நடைபெறுகின்றன. திருவிழா நாள்களில் தினமும் காலை 9 மணிக்கு வீதி புறப்பாடும், இரவு 9 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் வீதி உலாவும் நடைபெறுகின்றன. மே 23-ஆம் தேதி வியாழக்கிழமை 9-ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (19.05.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - சிம்மம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - ரிஷபம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

