குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மாணவியை கைப்பேசியில் படம் பிடித்தவா் கைது

News image

போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கட்டட தொழிலாளி ஸானு.

Updated On :26 மே 2026, 2:23 am IST

குளச்சல் அருகே மாணவியை கைப்பேசியில் தவறாக படம் பிடித்தவரை குளச்சல் மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் அருகே வாணியகுடி, பனவிளையைச் சோ்ந்தவா் ஸானு (34). கட்டடத் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவா் ஞாயிறன்று வாணியக்குடி அருகே உள்ள கடற்கரைக்குச் சென்றுவிட்டு வரும்போது வீட்டிலிருந்த பத்தாம் வகுப்பு மாணவியைத் தவறான முறையில் படம் எடுக்க முயன்றாா்.

இவா், படம் பிடிப்பதைக் கண்ட மாணவி சப்தமிட்டு பெற்றோரிடம் தெரிவித்தாா். இதைக் கண்ட ஸானு கைப்பேசியை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் லட்சுமி பிரபா, அவா் மீது போக்ஸோ சட்டம், தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து, போக்ஸோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.