ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் தேரோட்டத்தில் தேரில் வீற்றிருக்கும் ஸ்ரீஆண்டாள் சூடிக்கொள்வதற்காக, மதுரை கள்ளழர் சூடிக்களைந்த பரிவட்டம் செவ்வாய்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தது. இதனை கோயில் மரியாதையுடன் தக்கார் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
சித்ரா பௌர்ணமிக்கு கள்ளழகர் சூடிக் கொள்வதற்கு ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மங்களப் பொருட்கள் இங்கிருந்து மதுரை செல்லும். இதற்கு சீதனமாக இருமுறை சித்ரா பௌர்ணமிக்குக்கும், ஆடிப்பூரத்திற்கும் ஸ்ரீஆண்டாளுக்கு கள்ளழகர் சூடிக்களைந்த மாலை பரிவட்டம் வரும்.
ஆடிப்பூரத்தில், கள்ளழகர் சூடிக்களைந்த பரிவட்டத்தை சாற்றிக்கொண்டுதான் ஸ்ரீஆண்டாள் தேரில் வலம் வருவார்.
இதற்காக கள்ளழகர் சூடிக்களைந்த பரிவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு வந்தது. இதனை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன், சுதர்ஸன் பட்டர் ஆகியோர் கோயில் மரியாதையுடன் பெற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










