புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அப்பர் சுவாமிகளின் குருபூஜை விழா

திருவண்ணாமலையில் அப்பர் சுவாமிகளின் சித்திரை சதய குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2015, 10:37 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலையில் அப்பர் சுவாமிகளின் சித்திரை சதய குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை, சன்னதி தெருவில் உள்ள அப்பர் சுவாமிகள் திருமடத்தில் செவ்வாய்க்கிழமை இந்த விழா நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்-அலங்காரம் நடைபெற்றது.

காலை 11.30 மணிக்கு அப்பர் சுவாமிகள் மடத்தில் அப்பர் சுவாமிகளின் சித்திரை சதய குருபூஜை விழாவும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 3.30 மணிக்கு திருநாவுக்கரசு தெரு, வேடியப்பன் கோயில் தெரு, செல்லநேரித் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் அப்பர் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.

இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குருபூஜைக்கான ஏற்பாடுகளை அப்பர் சுவாமிகள் திருமடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.