சென்னை: சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 8-ஆம் தேதி நிறபுத்திரி மஹோத்சவம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் தோறும் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நிறபுத்திரி விழாவுக்காக ஒருநாள் நடை திறந்து மூடப்படுவதும் வழக்கம் அது போல் இந்த ஆண்டு 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறந்து 8-ஆம்தேதி இரவு 9 மணிக்கு சபரிமலையில் நடை மூடப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் இக் கோயிலிலும் அங்கு நடைபெறுவதை போன்றே, அறுவடை செய்த நெற்கதிர்களை கோயில் மேல்சாந்தியும், கீழ்சாந்திகளும் தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் சன்னதியில் வைத்து வழிபடும் இவ்விழா திங்கள்கிழமை காலை 5.45 மணியிலிருந்து 6.15 மணிக்குள் நடைபெறவுள்ளது. வழிப்பாட்டிற்குப் பின் இந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
தங்கள் இல்லத்தில் பூஜை அறையில் பிரசாதமாக வழங்கப்பட்ட நெற்கதிர்களை வைத்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம் என்றும், மேலும் தகவல்களுக்கு 044 - 28171197, 2197, 5197 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு நிர்வாக அதிகாரி அனிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

