நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மாசி மாதத்தில் அப்படியென்ன சிறப்பு? 

மாதங்களில் மகத்தான மாதம் என்ற அழைக்கப்படுவது மாசி. உபநயனம், வேதம் கற்றுக் கொள்ளுதல்,

News image
Updated On :14 பிப்ரவரி 2018, 5:47 pm IST


மாதங்களில் மகத்தான மாதம் என்ற அழைக்கப்படுவது மாசி. உபநயனம், வேதம் கற்றுக் கொள்ளுதல், கலைகளைக் கற்றறிதல், முதலான விஷயங்களுக்கான அற்புதமான மாதம் மாசி. இந்த மாதத்தில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என்பதைப் பார்ப்போம். 

மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்தக் காரியமும் இரட்டிப்புப் பலன்கள் தரும். மாசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். 

மாசி 2 - திருவோணம் 
பெருமாளுக்கு உகந்த - திருவோண விரதம். இதனை சிரவண விரதம் என்றும் கூறுவார்கள். மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று நாராயணனை வழிபட்டு விரதம் இருப்பதுதான் சிரவண விரதம்!

மாசி 3 - அமாவாசை
மாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில், முன்னோர் ஆராதனையை மறக்காமல் செய்வோம். தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து, பித்ருக்களின் ஆசியைப் பெறுவோம்!

மாசி 4 - பிரதமை
பிரதமை திதி விரதம் மிகவும் உத்தமமானது. அமாவாசைக்கு மறுநாளிலோ, அல்லது பௌர்ணமிக்கு மறுநாளிலோ பிரதமை திதியில் செய்யப்படும் விரதங்கள் சில உள்ளன. மாசி மாதத்தில் வரும் பிரதமை திதி மிகவும் உத்தமமானது.

மாசி 5 - சந்திர தரிசனம்
மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

மாசி 17 - பௌர்ணமி, மாசிமகம்
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் இருக்க, சூரியன் கும்ப ராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருப்பதான சேர்க்கை நடைபெறும். இந்தச் சேர்க்கை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது.

மாசிமகம் நீர்நிலைகளின் மேன்மையை மக்களுக்குப் போதிக்கிறது. எனவேதான் இறைவடிவங்களை நீர்நிலைகளில் தீர்த்தவாரியாடச் செய்வதோடு மக்களும் புனிதநீராடி மகிழ்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.