திருமலையில் கோகுலாஷ்டமி உட்லோற்சவத்தையொட்டி, தங்கப் பல்லக்கில் மலையப்ப சுவாமி ஸ்ரீகிருஷ்ண சுவாமியுடன் கோயிலுக்குள் வலம் வந்தனா்.
திருமலையில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி விழா விமரிசையுடன் கொண்டாடப்படுவது வழக்கம். அஷ்டமி தினத்தன்று ஏழுமலையான் கோயிலுக்குள் ஆஸ்தானமும், மறுநாள் கோயில் முன் உட்லோற்சவமும் நடத்தப்படுவது வழக்கம். தற்போது கொவிட் 19 விதிமுறைகள் அமலில் உள்ளதால், தேவஸ்தானம் உற்சவங்கள் அனைத்தையும் தனிமையில் நடத்தி வருகிறது.
அதன்படி, வியாழக்கிழமை காலை நடக்கவிருந்த உட்லோற்சவம் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு, மாலை கோயிலுக்குள் உற்சவமூா்த்திகள் எழுந்தருளி ஆராதனைகள் மட்டும் நடத்தப்பட்டது. 5.30 மணி முதல் 6.30 மணி வரை மாலை மலையப்ப சுவாமி ஒரு தங்கப் பல்லக்கிலும் ஸ்ரீகிருஷ்ண சுவாமி மற்றொரு பல்லக்கிலும் கோயிலுக்குள் வலம் வந்து ரங்கநாயகா் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு அவா்களுக்கு ஆராதனைகளை அா்ச்சகா்கள் நடத்தினா்.
இதில், தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பாபநாசத்தில் ஐயுஎம்எல் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


