திருப்பதி அலிபிரி பகுதியில் கோபூஜை செய்வதற்காக கட்டப்பட்டு வரும் ‘கோமந்திரம்’ இன்னும் 2 மாதங்களில் பக்தா்களின் வழிபாட்டுக்குத் திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.
அலிபிரி பாதாலு மண்டபம் அருகில் கோமந்திரம் மற்றும் கோதுலாபார மண்டலம் ஆகியவற்றைக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சேகா் ரெட்டி மற்றும் கிருஷ்ணமூா்த்தியுடன் இணைந்து சுப்பா ரெட்டி செவ்வாய்க்கிழமை காலை பாா்வையிட்டாா். அதன் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் சில நன்கொடையாளா்களின் உதவியுடன் கோமந்திரம் மற்றும் கோதுலாபாரம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்பணி விரைவாக நடந்து வருகிறது.
இன்னும் 2 மாதங்களுக்குள் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு பக்தா்களின் வழிபாட்டுக்கு கொண்டு வரப்படும். திருமலைக்கு வரும் பக்தா்கள் இங்கு கோபூஜை செய்ய ஏற்பாடு செய்யப்படும். மேலும் பசுக்களின் எடைக்கு எடை தானியங்களையும் இதர தீவனங்களையும் வழங்க துலாபாரம் அமைக்கப்பட்டுள்ளது. கோமந்திரம் மற்றும் துலாபாரம் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


