டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஜூன் 1 தொடக்கம்

மே 31 அன்று மாலை 6 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும்.

News image

நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன்.

Updated On :27 மே 2025, 8:24 am IST

சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசித்திருவிழா ஜூன்1 -ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட இக்கோயிலில் மே 31 அன்று மாலை 6 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும்.

இதையடுத்து சனிக்கிழமை (1.6.2025) காலை 9:25 முதல் 11 மணிக்குள் கொடியேற்றமும், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் வைகாசி திருவிழா தொடங்குகிறது. 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 9 மணிக்கு வெள்ளி கேட கத்தில் அம்மன் வீதி உலா வருவார்.

தினமும் இரவு 7 மணிக்கு அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷப, வெள்ளி குதிரை வாகனங்களில் வீதி உலா வருவார். விழாவின் 7 -ஆம் நாளான சனிக்கிழமை (7.6.2025) மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் கண்ணு டைய நாயகி கோயில் வளாகத்தில் வலம் வருவார்.

எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (8.6.2025) களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்பு கட் டுதல், அன்று இரவு 7 மணிக்கு அம்மன் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா காட்சி நடைபெறும்.

ஒன்பதாம் திருநாளான திங்கள்கிழமை (9.6.2025) அதிகாலை அலங்கரிக் கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள்வார். அன்று காலை 9.25 மணிக்கு தேரோட்டம் நடை பெறும்.

அன்று இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருவார். பத்தாம் நாளான செவ்வாய்க்கிழமை (10.6.2025) காலை 8 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி செலுத்துவர். பதினொன்றாம் நாளான புதன்கிழமை (11.6.2025) காலை உத்ஸவ சாந்தி, மாலை வெள்ளி ஊஞ்சல் உத்ஸவத்துடன் வைகாசி திருவிழா நிறைவு பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.