அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஜூன் 1 தொடக்கம்

மே 31 அன்று மாலை 6 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும்.

News image
நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன்.
Updated On :27 மே 2025, 2:54 am

DIN

சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசித்திருவிழா ஜூன்1 -ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட இக்கோயிலில் மே 31 அன்று மாலை 6 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும்.

இதையடுத்து சனிக்கிழமை (1.6.2025) காலை 9:25 முதல் 11 மணிக்குள் கொடியேற்றமும், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் வைகாசி திருவிழா தொடங்குகிறது. 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 9 மணிக்கு வெள்ளி கேட கத்தில் அம்மன் வீதி உலா வருவார்.

தினமும் இரவு 7 மணிக்கு அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷப, வெள்ளி குதிரை வாகனங்களில் வீதி உலா வருவார். விழாவின் 7 -ஆம் நாளான சனிக்கிழமை (7.6.2025) மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் கண்ணு டைய நாயகி கோயில் வளாகத்தில் வலம் வருவார்.

எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (8.6.2025) களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்பு கட் டுதல், அன்று இரவு 7 மணிக்கு அம்மன் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா காட்சி நடைபெறும்.

ஒன்பதாம் திருநாளான திங்கள்கிழமை (9.6.2025) அதிகாலை அலங்கரிக் கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள்வார். அன்று காலை 9.25 மணிக்கு தேரோட்டம் நடை பெறும்.

அன்று இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருவார். பத்தாம் நாளான செவ்வாய்க்கிழமை (10.6.2025) காலை 8 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி செலுத்துவர். பதினொன்றாம் நாளான புதன்கிழமை (11.6.2025) காலை உத்ஸவ சாந்தி, மாலை வெள்ளி ஊஞ்சல் உத்ஸவத்துடன் வைகாசி திருவிழா நிறைவு பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.