பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருப்பள்ளியெழுச்சி  - பாடல் 3

வீரம் செறிந்த கழல்கள் அணிந்த சேவடிகளை

Updated On :8 ஜனவரி 2018, 9:17 am

கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின
                 இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து ஒருப்படுகின்றது
            விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
          திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான்
            பள்ளி எழுந்தருளாயே.  

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்

குருகுகள் = பறவைகள். தாரகை = நட்சத்திரம். ஓவின = ஒழிந்தன, நீங்கின.

பொருள்

பொழுது புலர்ந்ததை உணர்த்தும் வண்ணம், குயில்கள் கூவின, கோழிகள் கூவின, பறவைகளும் ஒலி எழுப்பின, வெண் சங்குகள் ஒலித்தன. சூரியனின் ஒளி பரவவே வானத்தில் அதுவரை ஒளி வீசிக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் மறைந்தன. உதய காலத்தில் பரவும் ஒளி ஒருங்கு திரண்டு மிளிர்கின்றது. இறைவனே, நீ மிகுந்த விருப்பத்தோடு, வீரம் செறிந்த கழல்கள் அணிந்த சேவடிகளை எங்களுக்கு காட்டி அருள்வாயாக. திருப்பெருந்துறை தலத்தில் உறையும் இறைவனே, யாவரும் அறிவதற்கு அரியவனாக இருப்பவனே, எங்கள் மீது கருணை கொண்டு எங்களுக்கு எளியவனாக காட்சி தருபவனே, எம்பெருமானே நீ பள்ளி எழுந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.