பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் பந்தனை
வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்
பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்
விளக்கம்
பப்பு = பரப்பு என்ற சொல்லின் இடைக்குறை. மனம் எப்போதும் எங்கும் திரியும் இயல்பினை உடையது. இவ்வாறு எப்போதும் பரபரப்புடன் திரியும் மனத்தினை ஒரு நிலையில் அடக்கிவைத்தால், இறைவனை ஆழ்ந்து சிந்திக்க முடியும். அவ்வாறு சிந்திக்கும் அடியார்களை பப்பு அற வீட்டிருந்து உணரும் அடியார் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பந்தனை = உயிர்களைப் பிணைத்து நிற்கும் ஆணவ மலம், வினையின் பயன்களை துய்ப்பதற்காக உண்டாக்கப்பட்ட மாயாமலம், வினைகளாகிய கன்ம மலம் ஆகிய மும்மலங்கள்.
பொருள்
உமையம்மையின் கணவனாகிய இறைவனே, மனதில் பரபரப்பு ஏதுமின்றி, சிந்தனையை ஒருமுகப்படுத்தி உன்னை உணரும் அடியார்கள், தங்களைப் பிணித்துள்ள மூன்று மலங்களையும் அறுத்து உய்வினை அடைகின்றார்கள். மற்ற மானிடர்கள், தங்களைப் பெண்களாக பாவித்துக்கொண்டு உன்னை வந்தடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் உன்னை வணங்குகின்றார்கள்: செப்புக் கிண்ணங்கள் போன்று சீரான வடிவில் மலரும் தாமரைத் தடாகங்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை தலத்தில் உறையும் இறைவனே, எங்களது பிறவிப் பிணியினை அறுத்து, எங்களை ஆட்கொண்டு அருளுவதர்காக, நீ பள்ளி எழுந்தருள வேண்டும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


