சென்னையிலுள்ள விருகம்பாக்கம் நடேச நகர் பகுதியில் அமைந்துள்ள சிவ-விஷ்ணு ஆலையத்தில் அமைந்துள்ள காலபைரவர் சன்னிதியில் அஷ்டமி வழிபாடு வெகு விமரிசையாக சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த சிவ-விஷ்ணு ஆலையத்தில் அனைத்து சிறப்பு நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் 11.11.2017 அன்று ஸ்ரீ மகா தேவாஷ்டமி மற்றும் காலபைரவாஷ்டமி வழிபாட்டின் தொடர்பாக இக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் வடுகபைரவருக்கும், ஸ்ரீ ராமாநாத ஈஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
வடுக பைரவர் சன்னதியில் காலையில் மகா பைரவ மூலமந்திர ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. மாலையில் பைரவருக்கு உகந்த வழிபாடான வடைமாலை சார்த்தப்பட்டு, சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.
பைரவர் வழிபாடு சகல துன்பங்களையும் போக்க வல்லதும், மன நிம்மதியையும் அளிக்கவல்லது. இந்நிகழ்ச்சியை சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீ பிரசன்ன விநாயகர் பக்த சபை சிறப்பாக நடத்தியது.
இந்த ஆலயத்தில் நடைபெற்ற பைரவ வழிபாட்டினை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டு நலமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

