திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி தீர்த்த உற்ஸவம் விமரிசையாக நடைபெற்றது.
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மார்ச் 21-ல் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்த அருள்பாலித்தார்.
இந்நிலையில், நேற்று தீர்த்த உற்ஸவத்தையொட்டி உற்சவ சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உள்ளிட மூர்த்தங்கள் எழுந்தருளினர். தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சரவணப்பொய்கையில் எழுந்தருளினர்.
இந்த உற்ஸவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் சரவணப்பொய்கையில் திரண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









