தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மார்கழி பிறப்பையொட்டி நாளை சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

மார்கழி பூஜைக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைக்கோயில் நாளை நடை திறக்கப்பட்டு..

News image
Updated On :15 டிசம்பர் 2018, 7:33 am

DIN

மார்கழி பூஜைக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைக்கோயில் நாளை நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட முக்கியமான தினங்களில் 5 நாட்கள் மட்டும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்குச் செல்லப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் நாளை மார்கழி மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்தாண்டும் சிறப்பு பூஜைகள் நடத்தக்கோரி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முரளிகணேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், சதுரகிரி மலையில் மாலை 4 மணிக்கு மேல் மலை ஏறக்கூடாது என்ற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நாளை அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.