
கும்பகோணத்தில் உள்ள சைவ ஆலயமான, பிரஹன்நாயகி சமேத - ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலயத்தில், அருள்மிகு ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சித்திர ரூபத்திலும், ஸ்ரீவேணு கோபாலர் உற்சவ மூர்த்தியாகவும், ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத - ஸ்ரீ நடராஜப்பெருமான் சன்னதியில் எழுந்தருள் பாலித்து வருகிறார்கள்.
வைணவ சமயத்தில் உள்ளபடி, 18ஆம் தேதி காலை, வைகுண்ட ஏகாதசி தினத்தினை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி உற்சவர், மங்கள இன்னிசை முழங்க, கருட வாகனத்தில் வீதியுலா புறப்பாடு மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகம், மற்றும் ஸ்ரீ நாகேஸ்வரர் பக்தர்கள் செய்திருந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.