நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இன்று அசோகஷ்டமி: சீதா தேவியை பூஜிக்க வேண்டிய நாள்! 

அசோகஷ்டமி சோகம் என்றால் துன்பம். அசோகம் என்றால் துன்பமில்லாத தன்மை, மங்கலம், நன்மை என்று அழைக்கப்படுகிறது. 

News image
Updated On :24 மார்ச் 2018, 2:37 pm IST

அசோகஷ்டமி சோகம் என்றால் துன்பம். அசோகம் என்றால் துன்பமில்லாத தன்மை, மங்கலம், நன்மை என்று அழைக்கப்படுகிறது. 

சீதை அசோகவனத்தில் இருக்கும் போது இராவணனால் சிறை வைக்கப்பட்ட பத்து மாத காலத்தில் அங்கிருந்த மரம், செடி, கொடிகளுக்கு மத்தியில் சீதைக்கு பக்கத்தில் இருந்த ஒரு மரமே அசோக மரமாகும். 

அந்த அசோக மரமானது ராமரைப் பிரிந்து இருந்த காலத்தில் சீதைக்கு ஆறுதல் அளித்து சோகத்தை போக்கியதாக சொல்லப்படுகிறது. அந்த மரத்தைத் தான் இன்று உபாசிக்க வேண்டும். அசோக மரம் இருக்கும் இடத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்து ராமருக்கான ஸ்லோகங்களைச் சொல்லலாம்.
 

Story image

சீதைக்கு உகந்தது மருதாணி. அந்த இலைகளை மாலையாக கட்டி சீதாதேவிக்கு போடலாம். மருதாணியை நன்கு அரைத்து அம்பாளுக்கு அலங்காரம் பண்ணலாம். கையில் மருதாணி வைத்துக்கொண்டு அம்பாளை உபாசிக்கலாம். இன்றைய தினம் மருதாணியை வாங்கி தானம் செய்தால் நம் வீட்டில் இருக்கும் சோகங்கள் அனைத்தும் நீங்கி, மனம் தெளிவடையும். நிம்மதி கிடைக்கும் என்ற சூட்சமங்களை விரத சூடாமணியில் விளக்கமாகத் தெரிவித்துள்ளது. 

எனவே, அசோகஷ்டமியான இன்று அசோக மரத்தைப் பூஜித்து, மருதாணி இலை மற்றும் மருதாணி பூக்களை சீதா தேவிக்கு அர்ச்சனை செய்து வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுவோமாக..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.