ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

எப்போதும் நோயாளியாக இருக்கும் கிரகநிலைகள் யாருக்கு? 

சிலருக்கு நோய்கள் வந்தால், அவை விரைவில் குணமடையும். சிலருக்கு நீடித்துக்கொண்டே இருக்கும். சிலருக்கு...

News image
Updated On :27 மார்ச் 2018, 10:35 am

சிலருக்கு நோய்கள் வந்தால், அவை விரைவில் குணமடையும். சிலருக்கு நீடித்துக்கொண்டே இருக்கும். சிலருக்கு ஆயுள் முழுவதுமே நோயினால் தவிப்பார்கள். இத்தகைய நிலையில் ஆரோக்கியமாக இருக்கும் கிரகநிலையையும், எப்போதுமே நோயாளியாக இருக்கும் கிரகநிலையையும் பார்ப்போம். 

நோயிலிருந்து குணமடையும் கிரகநிலைகள்

• 12-க்குடையவன் பலமற்றவனாய் 8-க்குடையவனுடன் சேர்ந்திருந்து, 10-க்குடையவனும் பலம் பெற்றிருந்தால், அந்த மனிதன் நோயற்றவன் ஆகிறான். 

• சந்திரன் சுபருடன் கூடி, 6, 8, 12-ம் இடங்களைத் தவிர்த்து வேறு இடத்திலிருந்து லக்னாதிபதி சுபர் பார்வை பெற்றிருந்தால் தனக்கு வரும் நோயின் வீரியத்தை அறிந்துகொள்ளும் நிலை உண்டாகும். 

• லக்னத்தில் சுபக்கிரகம் இருந்தாலும் சந்திரன் சுபருடன் கூடி கேந்திரத்தில் இருந்தாலும் நோயிலிருந்து விடுபடுவான். 

• 12, 6, 8 4 ஆகிய இடங்கள் பாப சம்பந்தம் பெற்றிருந்து கேந்திரத்தில் சுபரும் இருந்தால் நோயின் வேகம் குறையும். 

• பிரசன லக்னத்திற்கோ, ஜன்ம லக்னத்திற்கோ 7, 8, 9, 5-ம் இடத்தில் சுபக்கிரகங்களோ, சுபரால் பார்க்கப்பட்ட வேறு கிரகங்களோ இருந்து, சந்திரன் 3, 6, 10, 11-ம் இடங்களில் ஏதேனும் ஒரு இடத்திலிருந்தால் ரோகம், ஆபத்து இவற்றால் பீடிக்கப்பட்டவர்கள் நோய்களில் இருந்து விடுபடுவான். 

• சந்திரன் 3, 6, 10, 11-ம் இடங்களில் இருந்தாலும் 5,9 கேந்திரம் 2-ம் இடத்தில் இருந்தாலும் லக்னம் சுபக்கிரகத்தால் பார்க்கப்பட்டால் நோயில் இருந்து விரைவில் குணமடைவான். 

Story image

எப்போதும் நோயாளியாகவே இருக்கும் கிரகநிலைகள் 

• ஆறுக்குடையவன் பாபரின் சேர்க்கையை அடைந்து, செவ்வாய் இராகுவுடன் சேர்ந்திருந்தால் ஜாதகர் எப்போதுமே ஏதேனும் ஒரு நோயின் தாக்கத்திலே இருப்பார். 

• செவ்வாய் 8, 7-ல் இருந்தால் கலகமும், ஜென்ம லக்ன, சந்திர லக்னத்திற்கு 12-ல் இருந்தால் ஜதகருக்கு செலவும் அதிகரிக்கும். 

• லக்னத்திலிருந்து புதனையோ, சந்திரனையோ பாபக்கிரகம் பார்த்தால் உடல்நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நோயிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

• லக்னத்தில் பாபரும் இருந்து சந்திரனும் பலமற்றதாக இருந்தால் அந்த மனிதன் நோயிலிருந்து ஏழுந்திருக்கமாட்டான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.