சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அறுபத்து மூவர் உலாவுக்கு காத்திருக்கும் மக்கள்: விழாக்கோலம் பூண்ட மயிலை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இன்று அறுபத்து மூவர் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி மயிலை கபாலீஸ்வரர் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

News image
Updated On :29 மார்ச் 2018, 7:42 am

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இன்று அறுபத்து மூவர் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி மயிலை கபாலீஸ்வரர் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

சென்னை மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விழாவுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், மதிய உணவு இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றது. 

இன்று மாலை 3 மணியளவில் அறுபத்து மூவர் உலா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அப்போது திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதையடுத்து, இரவில் பார்வேட்டை விழா, ஐந்திருமேனிகள் விழா ஆகியவை சிறப்பாக நடைபெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.