ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி 

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:08 pm

DIN

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரெய்சா மாவட்டத்தின் கத்ரா என்னும் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி குகைக்கோயில். புனிதமான இந்து சமயக் கோயில்களில் இதுவும் ஒன்று. சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத்தலமாக விளங்குகின்றது. 

கடந்த புதன்கிழமை திரிகுடா மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியதால், புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, யாத்திரை செல்வதற்கான முன்பதிவு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. 

இதுகுறித்து கோயில் மூத்த அதிகாரி கூறுகையில், 

திரிகுடா மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதைதொடர்ந்து, பக்தர்கள் செல்லும் பேட்ரி கார் வழியாகவும் காட்டுத் தீ பரவியதால் சுமார் 25 ஆயிரம் பக்தர்கள் கத்ராவில் முகாமிட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் சில பகுதியில் புகைந்து வருகின்றது. 

காட்டுத்தீயை அணைக்கும் பணிகளும், கோயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 

இந்நிலையில், தற்போது காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து யாத்திரை செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.