கார்த்திகை முதல் நாளான இன்று மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் 

கார்த்திகை முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இன்று காலை முதல் மாலை அணிந்து..
கார்த்திகை முதல் நாளான இன்று மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் 
Published on
Updated on
1 min read

கார்த்திகை முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இன்று காலை முதல் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கி வருகின்றனர். இதனால், ஐயப்பன் கோயில்களிலும், மற்ற கோயில்களிலும் ஐயப்பப் பக்தர்கள் குவிந்துள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று காலை ஐயப்பனுக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 

கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு கடல் மற்றும் ஆறுகளில் இன்று காலை முதல் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி வருகின்றனர். 

கன்னிசாமிகளுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்து மாலை அணிந்தனர். 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை நீலம், கருப்பு நிற ஆகிய நிறங்களில் உடை அணிந்து மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com