ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு முகப்பேர் கனகதுர்க்கா கோயிலில் ஆக.3-ல் ஆடிப்பூர பாலாபிஷேகம்

மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்க்கா திருக்கோயிலில் ஆடிப்பூர பாலாபிஷேகம் ஆகஸ்ட் 3-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. 

News image
Updated On :1 ஆகஸ்ட் 2019, 8:57 am

DIN

சென்னை, மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்க்கா திருக்கோயிலில் ஆடிப்பூர பாலாபிஷேகம் ஆகஸ்ட் 3-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. 

பூலோக வைகுந்த கைலாயம் என்றழைக்கப்படும் ஸ்ரீ கனகதுர்க்கா திருக்கோயிலில் வருடத்தில் ஒருநாள் ஆடிப்பூரத்தன்று பாலாபிஷேகம் சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஆகஸ்ட் 03, சனிக்கிழமை அன்று பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த பாலாபிஷேகத்தில் சுமங்கலிகளும், கன்னிப் பெண்களும், ஆண்களும் மூலஸ்தானத்திற்குள் நேரடியாகச் சென்று அம்பாளுக்கு பாலாபிஷேகம்  செய்யலாம்.

இத்திருத்தலத்தில் அம்பாள் எட்டரை அடிக்கு மேல் உயரமாக இருப்பதால் பக்தர்கள் அம்பாள் சிரசில் பால் ஊற்றிட விசேஷ ஏணிப்படி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ரூ.100 நன்கொடை தருபவர்களுக்குச் சிறப்பு வழியில் பாலாபிஷேகம் செய்யலாம். 

பாலாபிஷேகம் காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும். பால் எடுத்துக்கொண்டு மூலஸ்தானத்திற்குள் செல்பவர்களுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது. 

பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்கலாம். மாலை 5.00 மணிக்கு அம்பாளுக்கு வளையல் காப்பு  அலங்காரம் நடைபெற்று, மாலை 6.00 மணிக்கு மேல் அனைவருக்கும் வளையல் வழங்குவார்கள்.

அகத்தியரும் தர்மபத்தினி லோபமுத்ராவும் தம்பதியராக துர்க்கைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வரங்கள் பெற்றதாக சிவபுராணம் கூறுகிறது. அதனால், தம்பதிகளாக  துர்க்கைக்கு 7 விதமான சர்வாபிஷேகம் செய்துவந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஆனால், இதற்கும் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். அன்றைய  தினம் அதிகாலை 4.00 மணி முதல் முன்பதிவு தொடங்கும். இதற்கான கட்டணம் ரூ.1200/- மட்டுமே. 

வளையல் காப்பு அலங்காரம் செய்வதற்கு பக்தர்கள் வளையல்கள் வாங்கி தரலாம்.

கோயில் வாட்ஸ்அப் எண்: 9444777811

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.