நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தையொட்டி அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

News image
Updated On :3 ஆகஸ்ட் 2019, 6:25 am

தினமணி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளதால் அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்திவரதர் பெருவிழா 34-வது நாளாக நடைபெற்று வருகிறது. வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருநாளன்று ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று அந்த உற்சவம் நடைபெறுகிறது. 

கூடுதலாக, இந்தாண்டு அத்திவரதர் பெருவிழாவும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்திவரதர் வைபவம் மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டு, ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன்பின் மீண்டும் 8 மணிக்குப் பிறகு இரவு 10 மணி வரை அத்திவரதரைத் தரிசிக்கலாம்.

மேலும், ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதர் வைபவம் நிறைவடைவதால் அன்று மாலை 5.00 மணியோடு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.