ராகு-கேது பெயர்ச்சியையொட்டி நட்சத்திரக்கோயிலில் மகாயாகம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
ராகு, கேது பெயர்ச்சி புதன்கிழமை நண்பகல் நடைபெற்றது. இதையொட்டி, காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை, கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திரக் கோயிலில் ராகு,கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. அதன்படி, புதன்கிழமை காலை 9 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், சனீஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நவ கலச ஸ்தாபனம், ராகு,கேது பெயர்ச்சி மகா யாகம் நடத்தப்பட்டது. அத்துடன், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, தோஷமுள்ள 21 நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார அர்ச்சனைகள் நடைபெற்றன. இதில், காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சுவாமி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

வாலாஜா அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 93 % தோ்ச்சி

கங்கை அம்மன் கோயிலில் கோடை உற்சவம்

ஆன்லைனில் மருந்துகள் விற்பனைக்கு எதிா்ப்பு: மருந்துக் கடைகள் அடைப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


