சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

கோவிந்தராஜ சுவாமி கோயிலில்  தெப்போற்சவம் தொடக்கம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமை மாலை விமரிசையுடன் தொடங்கியது.

News image

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவம். (உள்படம்) தெப்பத்தில் வலம் வந்த கோதண்டராமர். 

Updated On :14 பிப்ரவரி 2019, 2:44 am IST


திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமை மாலை விமரிசையுடன் தொடங்கியது.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பௌர்ணமியை ஒட்டி,  தேவஸ்தானம் வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாலை முதல் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
7 நாள்கள் நடைபெற உள்ள இந்த தெப்போற்சவத்தின் முதல் நாளான புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு திருக்கோயில் எதிரே உள்ள திருக்குளத்தில் கோதண்டராம சுவாமி தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார். தெப்போற்சவத்தைக் காண பக்தர்கள் திரண்டனர். திருக்குளக்கரையில் அமர்ந்தபடி, கற்பூர ஆரத்தி எடுத்தனர். 
விழாவையொட்டி, திருக்குளம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரசார பரிக்ஷித் மற்றும் அன்னமாச்சார்யா திட்டத்தினர் சார்பில், ஆடல், பாடல், பஜனைகள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.