ராகு-கேது பெயர்ச்சியையொட்டி நட்சத்திரக்கோயிலில் மகாயாகம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
ராகு, கேது பெயர்ச்சி புதன்கிழமை நண்பகல் நடைபெற்றது. இதையொட்டி, காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை, கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திரக் கோயிலில் ராகு,கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. அதன்படி, புதன்கிழமை காலை 9 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், சனீஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நவ கலச ஸ்தாபனம், ராகு,கேது பெயர்ச்சி மகா யாகம் நடத்தப்பட்டது. அத்துடன், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, தோஷமுள்ள 21 நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார அர்ச்சனைகள் நடைபெற்றன. இதில், காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சுவாமி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!

தெரியுமா?
கைப்பேசியை அணைத்து வைத்தால்..!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


