திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நாளை மாசித் தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நாளை மாசித் தேரோட்டம்
Published on
Updated on
1 min read

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித்  திருவிழாவையொட்டி நாளை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் 9-ம் நாளான இன்று சுவாமி தங்க கைலாய பர்வத  வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

10-ம் திருவிழாவான நாளை சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள்பாலிக்கும்  தேரோட்டம் நடக்கிறது. 

20-ம் தேதி இரவு தெப்பத்திருவிழாவும், 21-ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com