ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அத்திவரதரை காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி..!

அத்திவரதர் பெருவிழாவின் எட்டு நாள் நிறைவடைந்த நிலையில் இன்று ஒன்பதாவது நாளாக அத்திவரதரை..

News image
Updated On :9 ஜூலை 2019, 6:10 am

தினமணி

அத்திவரதர் பெருவிழாவின் எட்டு நாள் நிறைவடைந்த நிலையில் இன்று ஒன்பதாவது நாளாக அத்திவரதரை காண திரளான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். கடந்த 7 நாள்களில் மட்டும் சுமார் 6 லட்சம் பேருக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்து ஞாயிற்றுக்கிழமையன்று வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அத்திவரதரை காண பெரும் ஆவலுடன் வந்துள்ளனர். ஆனால், போலந்து நாட்டினருக்கு ஆகம விதிகளைக் கூறி ஞாயிற்றுக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அதிருப்தியுடன் புறப்பட்டுச் சென்றனர்.

இதையடுத்து, அத்திவரதரை காண வரும் வெளிநாட்டவர்கள் அத்திவரதரை தரிசிக்க முக்கியஸ்தர்கள் வரிசையில் சிறப்பான வரவேற்புடன் அழைத்துச் செல்லப்படுவர் என ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் பெருவிழாவில் வெளிநாட்டவர் கலந்துகொள்வது வரவேற்கத்தக்கது. ஏற்கெனவே, மதுரை மீனாட்சிஅம்மன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெளிநாட்டவர் தரிசனம் செய்து வருகின்றனர். அதுபோல், அத்திவரதரை தரிசனம் செய்ய வேண்டும் எனும் நம்பிக்கையுடன் வரும் வெளிநாட்டவர்கள் தாராளமாகத் தரிசனம் செய்யலாம்.

இதன்மூலம், இந்து மதம் உலகளவில் மேலும் நன்மதிப்பை பெறும். அவ்வகையில், வெளிநாட்டவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என இந்து சமய அறநிலையத்துறை உயர்அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.