25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

திருப்பதியில் வாடகை அறை எடுத்துத் தங்குபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

திருப்பதியில் ஜூலை 1-ம் தேதி முதல் வாடகை அறை வழங்கும் நடைமுறைகளில்..

Published On :31 ஜனவரி 2024, 2:53 pm IST


திருப்பதியில் ஜூலை 1-ம் தேதி முதல் வாடகை அறை வழங்கும் நடைமுறைகளில் சிறிய மாற்றத்தை தேவஸ்தானம் கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான வாடகை வளாகங்களில் அறை எடுத்துத் தங்கி வருகின்றனர். இந்த வளாகங்களில், தர்ம தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் கவுன்ட்டர்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த வாடகை அறைகளை 90 நாள்களுக்கு முன் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை தேவஸ்தானம் அளித்து வந்தது. ஆனால், நேரடியாக வரும் பக்தர்களுக்கு வாடகை அறை வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதால், தேவஸ்தானம் இந்த நடைமுறையில் சிறிய மாற்றத்தைச் செய்துள்ளது.

திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள விஷ்ணு நிவாசம் வளாகத்தில் உள்ள வாடகை அறைகள், நேரடி முன்பதிவில் மட்டுமே வழங்கப்பட உள்ளன. பக்தர்கள் அறை ஒதுக்கீட்டைப் பெற்ற பின், 24 மணிநேரத்திற்குள் அறையைக் காலி செய்ய வேண்டும். மேலும் பேருந்து நிலையம் எதிரில் உள்ள சீனிவாசம் மற்றும் மாதவம் உள்ளிட்ட வளாகங்களில் உள்ள வாடகை அறைகள் இணையதள முன்பதிவு மூலம் மட்டுமே வழங்கப்பட உள்ளன.

இணையதளம் வாயிலாக வாடகை அறை முன்பதிவு செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட நேரத்திற்கு வரத் தவறினாலும், முன்பதிவில் குறிப்பிட்டுள்ள 24 மணி நேரத்திற்குள் அறையைக் காலி செய்ய வேண்டும். அவர்களுக்கு நேர நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. இந்த மாற்றம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.