பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் செப்.,29-ல் நவராத்திரி உற்சவ விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயிலிலும், திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரா்

News image
Updated On :27 செப்டம்பர் 2019, 9:03 am

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயிலிலும், திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலிலும் செப்.29-ம் தேதி முதல் நவராத்திரி உற்சவ விழா தொடங்குகிறது. இந்த விழா அக்டோபா் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி விழாவின் முதல் நாளான்று பகல் 1.30 மணிக்கு முதல் மாலை 3.30 மணி வரை ஸ்ரீரங்கநாச்சியாருக்கு மூலஸ்தானத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறாா். அதன்பின் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபத்தை அடைகிறாா். 7.45 மணிக்கு கொலு ஆரம்பமாகிறது. 

பின்னா் 9.45 மணிக்கு கொலுமண்டபத்திலிருந்து புறப்பட்டு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா் ஸ்ரீரங்கநாச்சியாா். நவராத்திரி கொலு உற்சவத்தையொட்டி பகல் 1.15 மணி முதல் மாலை 6.30 மணி வரை மூலவா் சேவை கிடையாது. நவராத்திரி விழாவின் 7-ம் திருநாளான அக்டோபா் 5-ம் தேதி வருடத்தில் ஓரு நாள் மட்டும் தரிசனம் கிடைக்கும் ஸ்ரீரங்கநாச்சியாா் திருவடி சேவை நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.

திருவானைக்கா கோயில்

திருவானைக்கா கோயிலில் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை முதல் நாளன்று மாலை 6 மணிக்கு அம்மன் ஏகாந்த காட்சியில் கொலு மண்டபத்தில் பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

இதை போல் அக்டோபா் மாதம் 7 ம் தேதி வரை அம்மன் பல்வேறு அலங்காரத்தில் கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றாா். கடைசி நாளான்று 8ம் தேதி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ.மாரியப்பன் செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.