இந்துக்களின் அழியா பவித்திரம்!

தர்ப்பையின் மகிமையை யஜுர் வேதத்தில் கூறப்படுகிறது என்னவென்றால், "இந்த புல்லானது தேவர்களின் பொருட்டு சேகரிக்கப்படுகிறது..
இந்துக்களின் அழியா பவித்திரம்!

தர்ப்பையின் சிறப்பு 

தேவானாம் பரிஷூதமஸி வர்ஷவ்ருத்தமஸி,

தேவபர்ஹிர்மாத்வாஞ்..விவயஹம் ருஹேம!

தர்ப்பையின் மகிமையை யஜுர் வேதத்தில் கூறப்படுகிறது என்னவென்றால், "இந்த புல்லானது தேவர்களின் பொருட்டு சேகரிக்கப்படுகிறது மற்றும் இயற்கையால் வளர்கிறது.  அறுப்பதற்கு கத்தியை வைக்கிறேன். உன்னை அறுப்பவனாயினும் நான் குறைவற்றவனாகவே இருக்கவேண்டும். தர்ப்பமே, நீ இன்னும் அதிகமாக தளிர்களாய் தளிர்த்து  இனிது தழைப்பாயாக”.

தர்ப்பை முக்கியமான புண்ணிய பூமியில் தான் வளரும். இந்த தாவரம் மலைக்குன்றுகளில் நதிக்கரை ஓரங்களில், காடுகளில் வளரும். தர்ப்பை மழைக்காலங்களிலும்  வெயில் காலங்களிலும் அழியாத் தன்மை கொண்டது தானாக வளரும் ஒரு பழம்பெரும் மகத்துவம் வாய்ந்த தாவரம். இந்தப் புல்லில் ஒருவகை இனிப்பும், துவர்ப்பும் கலந்த  தன்மை மற்றும் சூரியனின் வெட்பத்தை தன்னுள் ஆட்கொண்டு பின்பு உடல் மற்றும் மனதில் குளிர்ச்சியை உண்டாக்கக் கூடியது. தர்ப்பை புல் சக்தி வாய்ந்தது  நூற்றுக்கணக்கான தண்டுகளையும், ஆயிரக்கணக்கான இலைகளையும் உடையது. ஏனைய மூலிகைகளை விட இது வலிமை வாய்ந்தது. 

நேர்மறை ஆற்றல் (Positive energy)

  • சக்திவாய்ந்த மின்சாரம்: தர்ப்பை புல்லுக்கா இவ்வளவு சக்தி என்று ஆச்சரியத்தில் திகைக்க வைக்கிறது. மின்சாரம் பாயாத பொருட்களில் தர்ப்பையும் ஒன்று. ஆனால்,  மின்சாரத்தை விடப் பலமடங்கு செயல்திறன் கொண்டது தர்ப்பை. தர்ப்பையின் சாம்பலை வைத்துத்தான் கோவில் பிரகாரத்தில் இருக்கும் ஐம்பொன் சிலைகள் மற்ற  சாமான்களையும் துலக்குவார்கள்.
     
  • குசா ஆசனம்: நம் சித்தர்களும் மற்றும் ஞானிகளும் பஞ்சபூத சக்திகளை கொண்ட பிரபஞ்ச சக்தியையும் ஆற்றலையும் எவரெல்லாம் பெற்றனர் என்று பார்ப்போம்.  சித்தர்களுக்கு நீண்ட நல்ல தவம் செய்ய தர்ப்பாசனம் பயன்படுத்துவார்கள் அவற்றை புலித்தோல், மான் தோல் மற்றும் குசா என்ற தர்ப்பை கொண்டு பயன்படுத்தி  வந்தார்கள். இதில் தர்ப்பாசனம் கொண்டு தவம் புரியும்பொழுது ஒரு ஈர்ப்பு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும், பூச்சிகள் வராமல் இருக்கும் ஒரு தடுப்பு சுவராகவும் அமைந்துள்ளது. முக்கியமாக ஞானிகளுக்கும் கடவுளுக்கும் ஒருவித இணைப்பு ஆற்றல் (connectivity) இருந்துகொண்டு இருக்கும். ஈர்ப்பு சக்தி என்றவுடன் தாமிர  சக்தி வந்துவிட வேண்டும். 

தர்ப்பையின் புராண சிறப்பு

  • தர்ப்பை என்பது ஒரு இந்துக்களின் முக்கியமான ஒரு பாவ தோஷங்களை அகற்றும் தன்மை கொண்டது. பிரம்மனின் மூக்கிலிருந்து தர்ப்பை - ஆண், பெண், அலி ஆகிய 3  வடிவில் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. இதில் மும்மூர்த்திகள் அடங்கியுள்ளனர். எப்படி என்று கேட்கிறீர்களா அடி தர்ப்பையில் பிரம்மனும் இடையில் சிவனும்  முனையில் விஷ்ணுவும் இருப்பதாகப் புராணம் கூறப்படுகிறது. தேவ தர்ப்பணத்திற்கு நுனியாலும், மனித தர்ப்பணத்திற்கு மத்தியாலும், பித்ரு தர்ப்பணத்திற்கு மடித்து நுனியாகவும், தர்பணாதிகள் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் வரையறுத்துள்ளது. 
  • சரவணம் என்றால் தர்ப்பையில் தோன்றுதல் என்று கூறப்படுகிறது. சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து பறந்த தீப்பொறிகள், தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால்  சரவணபவ எனப் பெயர் வந்தது.
     
  • இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் அமர்ந்த வீரியம், தெய்வீக புல் மற்றும் ‘குசா’ என்பதாகும்.
     
  • தர்மசாஸ்திரத்தை செயல்படுத்தும்போது, கையில் தூய்மையான ‘பவித்ரம்’ (தர்ப்பை) அணிய வேண்டும். யாகங்களில் பவித்ரத்தை பயன்படுத்தாமல் போனால் அந்த யாகம்  பயனற்றது என்று யஜூர் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்துகளின் பிறப்பு இறப்பு கூட வரும் பவித்ரம். தர்ப்பை பவித்ரம் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் அதில்  அடங்கியுள்ள தர்ப்பையின் எண்ணிக்கை ஒன்றாக இருக்காது. கர்மாவின் தன்மையைப் பொருத்து மாறும். பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பையாலும், சுப காரியங்களில்  இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பைகளாலும் தேவகாரியங்களில் ஐந்து தர்ப்பைகளாலும் சாந்தி, கர்மா போன்றவற்றில் ஆறு தர்ப்பைகளாலும்  மோதிரம் போல் முடிய வேண்டும்.
  • தர்ப்பைப் புல்லின் மகிமையைப் பற்றி யஜூர், அதர்வண வேதங்களிலும், சம்ருதி சிந்தாமணி, சம்ருதி பாஸ்கரம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலும், நிகண்டு ரத்தினாகரம்,  ராஜ நிகண்டு போன்ற ஆயுர்வேத நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.
     
  • கோவில்களில் கொடிமரத்தில் தர்ப்பை புல்லைக் கொண்டு மூடிவைப்பார்கள். எந்தவித தீய சக்தியும் அண்டாது.

கிரகங்களும் பவித்ரமும் 

  • ஆத்ம கரணை சூரியனிடத்தில் இருந்து நம்மைக் காக்கும் தெய்வ புல். சூரிய கிரகணத்தின் பொழுது இதன் சக்தி மகாசக்தியாக மாறும். கிரகண காலத்தில் உணவுப்  பொருள்களிலும், குடிநீரில் மற்றும் அங்கங்கே தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள். கிரகணத்தின்போது அசுத்தம், அதிக  கதிர்வீச்சு உண்டாகும் கிரகண தீட்டு என்கிற தோஷமான கதிர்களைத் தடுக்கும் சக்தி  தர்ப்பை என்ற தெய்வீக புல்லுக்கு உண்டு . கிரணத்தை நம் மூதாதையர்கள்   கூறுவது "சூரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்குத் தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்!” என்று சொல்லுவார்கள்.   
     
  • சந்திரன் காரகத்துவம் கொண்ட நீரைச்  சுத்தம் செய்யும் ஆற்றல் இந்த தர்ப்பைக்கு உண்டு. சந்திரனால் பாதிக்கும் இடம் சிறுநீரகப் பை. அந்த சிறுநீரக பாதிப்புக்கு ஒரு  அருமருந்தாகத் தர்ப்பை உள்ளது என்று சித்தர் வாக்கு. உஷ்ணத்தைத் தனித்துக் குளிரவைக்கும் ஆற்றல் இந்த தர்ப்பைக்கு உண்டு. கிரகண நேரத்தில் நாம் நீரோ உணவோ  அருந்தக்கூடாது எனவும் அப்படித் தவிர்க்க முடியாமல் தண்ணீர் குடிக்க நேர்ந்தால் அதில் தர்ப்பைப் புல்லைப் போட்டுக் குடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. குடிநீரிலும்  ஏற்படும் தோஷ நிவர்த்தி இந்த தர்ப்பைப் புல்லுக்கு உண்டு.
     
  • சனீஸ்வரன் வீற்றிருக்கும் திருநள்ளாறில் தர்ப்பைப் புல் வளரும் காடாக இருந்தது. அதனால் தான் அங்கு வீற்றுக்கும் ஈஸ்வரனை 'தர்பாரண்யேஸ்வரர்' என்று  அழைக்கப்படுகிறார். பிரசித்திபெற்ற திருநள்ளாறு சனி பகவான் கோயிலின் தல விருட்சம் தர்ப்பைப் புல். இந்த பகுதி ஒரு நேர்மறை எதிர் சக்தி பிரதிபலிக்கும். சனீஸ்வர  பகவானின் அருளால், தாக்கத்தால் சனிக் கிரகத்திலிருந்து வரும் கதிர்வீச்சால் திருநள்ளாறுக்கு மேலே பறக்கும் விமானம், செயற்கைக்கோள் அல்லது ராக்கெட் போன்றவை  ஓரிரு நிமிடங்கள் செயலிழந்து விடுகின்றன என்று கூறுகின்றனர்.
     
  • சுக்கிரன் தன்மை: புல்லாக இருக்கும் ஒன்றை ஆசனமாக மாற்றும்பொழுது சுக்கிரன் அங்கு வந்து விடுகிறார். இடுப்புக்குக் கீழ்ப் பகுதி சுக்கிரனின் அதிகம் ஏற்படும். தர்ப்பைப்  பாயில் அமர்ந்தால் அதிக நேர்மறை சக்தியுடன் நோய் எதிர்ப்புச் சக்தியும் உருவாக்கும்.  

அறிவியல் ஆராய்ச்சி

  • தர்ப்பைக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உண்டு. எனர்ஜி என்றவுடன் பஞ்சலோகம் நமக்கு நினைவில் வரும். உடம்பில் முக்கியமான உலோகம் காப்பர் அதன் செயல்பாடு மூளை  ஆற்றலை அதிகப்படுத்தும் ஒரு முக்கிய மின்சார சக்தி ஆகும். இந்த தர்ப்பையில் அதிக காப்பர் அடங்கியுள்ளது. கரண்ட் பாஸ் பண்ணுவதற்கு காப்பர் எவ்வளவு முக்கியமோ  அதேபோல் இந்த தர்ப்பையில் உஷ்ணம் கூடிய சக்தி அதிவேகமாகக் கடத்தும் தன்மை கொண்டது. அதனால்தான் கும்பாபிஷேகங்களில் தர்பையை தங்கம் வெள்ளி  இணையாக வைப்பார்கள். ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வெளிப்படும். 

  • நம் காஞ்சி மஹா பெரியவா தர்ப்பையின் பெருமைகளைப் பற்றி, “தர்ப்பை, துளசி, வில்வம் என்றபடி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனமாகின்ற வற்றுக்கெல்லாம் வைத்திய ரீதியிலோ, மற்ற அறிவியல் ரீதியாக அழுத்தமான அடிப்படையிருக்கிறது என்கிறார்கள்.
     
  • அறிவியல் ஆராய்ச்சியில் தர்ப்பையை பரிசோதித்தபோது அது 60% எக்ஸ்ரே கதிர் வீச்சுகளை வாங்கிக் கொள்வதைக் கண்டாராம். ஆகவே, தர்ப்பை மேலும் பல கதிர்வீச்சுகளை அடக்கிவிடும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் சில வேத மந்திரங்களை உச்சரிக்கும்போது தர்ப்பை அணிவது கட்டாயமாகக் கருதப்படுகிறது.

தர்ப்பையின் மருத்துவ மகிமை 

தர்ப்பைக்கு இன்னும் அதிக மருத்துவ குணங்கள் உண்டு அதை ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம். தர்ப்பை, சித்த மருத்துவத்தில் மட்டுமல்லாமல் யுனானி, ஆயுர்வேத  மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

  • தண்ணீரில் இருக்கும் கிருமியைச் சுத்தம் செய்ய காப்பர் கம்பி இல்லாதவர்கள் சிறிது தர்ப்பைப் புல்லை போடலாம் அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும். சூட்டைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. சூட்டால் ஏற்படும் அனைத்து வயிற்றுநோய்களும் தீர்க்கப்படும்.
     
  • சித்தர்கள் மூன்று கூறுகளாக உடலில் உள்ளவற்றைப் பிரிப்பார்கள் பித்தம், கபம், வாதம் மொத்தமும் அகற்றக்கூடிய மருந்து இந்த தர்ப்பை கொண்ட உருவாகின்றனர். ரத்த செல் நாளங்களில் தேங்கியிருக்கும் கழிவுப்பொருள்கள் அகல்வதுடன் மின்காந்தப் பாதையில் உள்ள தடைகள் நீங்கும். வாதம், பித்தம், கபம் சுத்திகரிக்கப்படும் என்று  ஆயுர்வேத மருத்துவத்திலும் உள்ளது.
     
  • சிறுநீர் கல் நீக்கத் தர்ப்பை பயன்படுகிறது. யூரியா கிரீடினினே எனக்கு சரியான மருந்து. உடலில் ஏற்படும் யூரியா கிரீடினினே மாறுபாட்டின் அளவை சரிசெய்யும்.
     
  • காப்பர் அதிகமாக உள்ளதால் இது உடல் எடையைக் குறைக்கும் தொற்று நோய் வருவதைத் தடுக்கும். அவர்கள் அதனால்தான் ஞானிகள் சரமாகப் பயன்படுத்துவார்கள்.  கிராமங்களில் வீட்டு வாசலில், கூரைகளில் கட்டி வைத்திருப்பார்கள்.
     
  • ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்ப்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும்.
     
  • தர்ப்பை ஆசனத்தில் உட்கார்ந்தவர் என்ன நோயால் தாக்கப்பட்டிருக்கிறார் என்று கண்டறியலாம். எப்படி என்று கேட்கிறீர்களா அதில் நீர் தெளித்து இந்த நோய் என்று கண்டறியலாம் சித்தர்கள் கூற்று. முக்கியமாக இதில் மனிதன் சுவாசிக்கத் தேவையான பிராணவாயு அதிகமாக இருக்கிறது. 
     
  • இந்தப் பாயால் உடல் சூடு குறைக்கப்படும் மன உளைச்சல் நீக்கி உறக்கம் வரும், ஆரோக்கியம், ஆயுளையும் அதிகப்படும்.
     
  • சர்க்கரை நோய், விஷக்கடிக்கு மருந்து, இதில் மருத்துவ சக்தி அமைந்துள்ளது.
     
  • தர்ப்பை பிதுர் காரியத்துக்கு மட்டும் அல்லாமல் உடல் ரீதியாக ஏற்படும் நோய்களின் அழிப்பானாகக் கருதுகிறேன். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை இன்னும் ஆராய்ந்து நோய்களின் மருந்தாக வெளி உலகிற்குக் கொண்டு வர வேண்டும். 

- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com