தர்ப்பையின் சிறப்பு
தேவானாம் பரிஷூதமஸி வர்ஷவ்ருத்தமஸி,
தேவபர்ஹிர்மாத்வாஞ்..விவயஹம் ருஹேம!
தர்ப்பையின் மகிமையை யஜுர் வேதத்தில் கூறப்படுகிறது என்னவென்றால், "இந்த புல்லானது தேவர்களின் பொருட்டு சேகரிக்கப்படுகிறது மற்றும் இயற்கையால் வளர்கிறது. அறுப்பதற்கு கத்தியை வைக்கிறேன். உன்னை அறுப்பவனாயினும் நான் குறைவற்றவனாகவே இருக்கவேண்டும். தர்ப்பமே, நீ இன்னும் அதிகமாக தளிர்களாய் தளிர்த்து இனிது தழைப்பாயாக”.
தர்ப்பை முக்கியமான புண்ணிய பூமியில் தான் வளரும். இந்த தாவரம் மலைக்குன்றுகளில் நதிக்கரை ஓரங்களில், காடுகளில் வளரும். தர்ப்பை மழைக்காலங்களிலும் வெயில் காலங்களிலும் அழியாத் தன்மை கொண்டது தானாக வளரும் ஒரு பழம்பெரும் மகத்துவம் வாய்ந்த தாவரம். இந்தப் புல்லில் ஒருவகை இனிப்பும், துவர்ப்பும் கலந்த தன்மை மற்றும் சூரியனின் வெட்பத்தை தன்னுள் ஆட்கொண்டு பின்பு உடல் மற்றும் மனதில் குளிர்ச்சியை உண்டாக்கக் கூடியது. தர்ப்பை புல் சக்தி வாய்ந்தது நூற்றுக்கணக்கான தண்டுகளையும், ஆயிரக்கணக்கான இலைகளையும் உடையது. ஏனைய மூலிகைகளை விட இது வலிமை வாய்ந்தது.
நேர்மறை ஆற்றல் (Positive energy)
தர்ப்பையின் புராண சிறப்பு
கிரகங்களும் பவித்ரமும்
அறிவியல் ஆராய்ச்சி
தர்ப்பையின் மருத்துவ மகிமை
தர்ப்பைக்கு இன்னும் அதிக மருத்துவ குணங்கள் உண்டு அதை ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம். தர்ப்பை, சித்த மருத்துவத்தில் மட்டுமல்லாமல் யுனானி, ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி