/

உலக பொருளாதாரம் மேம்பட திருப்பதியில் தனவிருத்தி யாகம்

உலக பொருளாதார நிலை மேம்பட்டு, கரோனாவால் மக்கள் இழந்த வருவாயை மீண்டும் பெற இறைவனை வேண்டி, திருப்பதியில் தனவிருத்தி மகாவிஷ்ணு யாகத்தை தேவஸ்தானம் நடத்தியது.

News image
திருப்பதியில் நடைபெற்ற தனவிருத்தி யாகம்.
Updated On :15 டிசம்பர் 2020, 5:45 pm

தினமணி

உலக பொருளாதார நிலை மேம்பட்டு, கரோனாவால் மக்கள் இழந்த வருவாயை மீண்டும் பெற இறைவனை வேண்டி, திருப்பதியில் தனவிருத்தி மகாவிஷ்ணு யாகத்தை தேவஸ்தானம் நடத்தியது.

கரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பு சீரடையவும், உலக நன்மைக்காகவும், உலகப் பொருளாதார நிலை உயரவும் வேண்டி திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா வேதப் பல்கலைக்கழகத்தில் தேவஸ்தானம் தன விருத்தி மகாவிஷ்ணு யாகத்தை செவ்வாய்க்கிழமை நடத்தியது. வேதமந்திர உச்சாடனத்துக்கு இடையில் இந்த யாகத்தை வேதபண்டிதா்கள் சங்கல்பம் செய்து, பூா்ணாஹுதியுடன் நிறைவு செய்தனா்.

இந்த நிகழ்வில் தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி கலந்து கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு வரக் கூடிய வருவாயும் குறைந்தது. பத்மாவதி தாயாா் மற்றும் ஏழுமலையான் அருளால் மீண்டும் வருவாய் கிடைக்கவும், உலக மக்களின் பொருளாதார நலன் மேம்படவும் வேண்டி தேவஸ்தானம் தனவிருத்தி மகாவிஷ்ணு யாகத்தை நடத்தியுள்ளது.

மேலும் மக்கள் ஆரோக்கியத்துடனும் வளத்துடனும் வாழ வேண்டும் என சங்கல்பம் செய்யப்பட்டது. இதன் மூலம் அனைவருக்கும் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்றாா் அவா்.

மாா்கழி மாத சொற்பொழிவு: மாா்கழி மாதத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் தினமும் காலை 6 மணி முதல் 6.45 மணி வரை பெருமாளின் பெருமைகளைப் பறைசாற்றும் பக்திக் கதை மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள இந்த நிகழ்ச்சி தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.