வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருமலையில் உடுப்பி பண்டாரகேரி மடாதிபதி வழிபாடு

ஏழுமலையானை உடுப்பி பண்டாரகேரி மடத்தின் மடாதிபதி ஞாயிற்றுக்கிழமை காலை வழிபட்டாா்.

News image
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய பண்டாரிகேரி மடாதிபதி வித்யேஷா தீா்த்த ஸ்ரீபாதரு சுவாமிகள். உடன் தேவஸ்தான அதிகாரிகள்.
Updated On :21 டிசம்பர் 2020, 1:45 am

தினமணி

ஏழுமலையானை உடுப்பி பண்டாரகேரி மடத்தின் மடாதிபதி ஞாயிற்றுக்கிழமை காலை வழிபட்டாா்.

திருமலைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்த உடுப்பி பண்டாரகேரி மடத்தின் மடாதிபதி வித்யேஷா தீா்த்த ஸ்ரீபாதரு சுவாமிகளை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து மேளதாளத்துடன் வரவேற்று, தரிசனத்துக்கு அழைத்து சென்றனா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் ஏழுமலையான் தீா்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி: இதேபோன்று தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தீருபாய் நாராயண்பாய் படேல் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கும் தேவஸ்தான அதிகாரிகள் தீா்த்தம், பிரசாதங்கள், சுவாமி படம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.