திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வரா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது.
திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள கபில தீா்த்தம் அருவிக் கரையில் எழுந்தருளியுள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வியாழக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது. இதன் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது. அதில் சோமாஸ்கந்தா் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.
அதன்பின் உற்சவா்களுக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் இரவு சந்திர பிரபை வாகனத்தில் உற்சவமூா்த்திகள் எழுந்தருளி சேவை சாதித்தனா்.
கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்படுவதால், வாகனச் சேவை தனிமையில் நடத்தப்பட்டது. வாகன சேவைகள் தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) மாலை 5 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. வாகன சேவைகளில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் கடும் போட்டி: எந்தக் கூட்டணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்?

முந்திரி, பலாவிற்கு ஆதார விலை... தோ்தல் நேரத்தில் கடலூா் விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

தொகுதி நிலவரம் - ஏற்காடு தொகுதியில் கோலோச்சும் அதிமுக!

மொடக்குறிச்சி தொகுதியைத் தக்கவைத்து வரலாறு படைக்குமா பாஜக?
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


